ஆதியாகமம் Genesis Book Summary
ஆதியாகமத்தின் அர்த்தம்
கிரேக்க மொழியில் – “Genesis” என்ற வார்த்தைக்கு “ஆரம்பம், மூலம்,
தொடக்கம்” என்று பொருள்படும். எபிரேய மொழியில் “Bereshit” என்ற வார்த்தைக்கு “ஆதியிலே” என்று பொருள்படும்.
பல ஆரம்பங்களின் புத்தகம்
- பிரபஞ்சத்தின் ஆரம்பம்
- உயிர்களின் ஆரம்பம்
- மனித குலத்தின் ஆரம்பம்
- ஓய்வு நாளின் ஆரம்பம்
- திருமணத்தின் ஆரம்பம்
- பாவத்தின் ஆரம்பம்
- மரணத்தின் ஆரம்பம்
- மீட்பின் ஆரம்பம்
- தீர்க்கதரிசனத்தின் ஆரம்பம்
- குடும்பத்தின் ஆரம்பம்
- மொழியின் ஆரம்பம்
- பலியிடுதலின் ஆரம்பம்
ஆக்கியோன்
- இந்த புத்தகத்தை எழுதியவர் மோசே என்பது பாரம்பரிய நம்பிக்கை. மோசேயால் எழுதப்பட்ட முதல் ஐந்து புத்தகங்களை எபிரேய மொழியில் . “தோரா” (Torah) என்ற அழைப்பர்.
- தோரா என்பதற்கு – கற்பித்தல் கொள்கை – அறிவுறுத்துதல் பொருள்.
- கிறிஸ்தவ வேத அறிஞர்கள் எபிரேய வேதாகமத்தின் ஐந்து புத்தகங்களையும் ‘Pentateuch’ அதாவது “ஐந்நூல்” என்ற பொதுப்பெயரால் அழைப்பர்.
தகவல்கள்
- கி.மு. 1450 முதல் 1410 காலப்பகுதியில் எழுதப்பட்டது
- 50 அதிகாரங்களை கொண்டது 1553 வசனங்களை கொண்டது
வரலாற்றுக் காலவரிசை
- அதின் சம்பவங்கள் மோசேயின் பிறப்பிற்கு 3 நூற்றாண்டுகளுக்கு முந்தியவை.
- வேதாகமத்தின் எந்த புத்தகத்தின் கால அளவை காட்டிலும் ஆதிக அளவில் நடந்த சம்பவங்களை ஆதியாகமம் பதிவு செய்துள்ளது.
- மீதியான 65 புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ள கால அளவிலும் அதிக கால அளவிலான சம்பங்களை ஆதியாகம் கொண்டுள்ளது.
- 4100 ஆண்டுகால வரலாறு வேதாகமத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
- ஆதியாகமத்தில்: 2286 ஆண்டுகள் நடந்த சம்பவங்கள்
- யாத்திராகமம் முதல் வெளிப்படுத்தல் வரை 1814 ஆண்டுகள் நடந்த சம்பவங்கள்.
- ஆதியாகமத்தின் 1ம் அதிகாரம் முதல் 11ம் அதிகாரம் வரை 2000 ஆண்டுகள் நடந்த சம்பவங்கள் பதிவிடப்பட்டுள்ளது.
புவியியல் அமைப்பு
- இந்த புத்தகத்தில் தற்கால எகிப்து, இஸ்ரவேல், பாலஸ்தீனம், லெபனான். சிரியா, ஈரான், ஈராக் ஆகிய நிலப்பரப்புகள் சொல்லப்படுகின்றன.
- வேதாகமமானது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாற்றை கொண்டுள்ளதால் பேரரசுகள் மாறும்போது இடங்களின் பெயர்கள் மாறுவதோடு அதன் புவியியல் எல்லைகளும் மாறிவிடும்.
- அதன் விளைவாக வேதாகமத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயர் அந்த பெயர் தவிர்ந்த வேறு பெயர்களால் அழைக்கப்படுவதும், மொழிகளால் மாற்றமடைவதும், எழுத்துக்கள் திரிபு அடைவதால் உச்சரிப்பு மாறுவதும் உண்டு. .
- ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்கள் “பண்டைய கிழக்கு அருகாமை” என்று அழைக்கப்படும் பெரும் நிலப்பரப்பில் நிகழ்ந்த சம்பவங்களை விபரிக்கின்றது. அதிலே முதன்முதலாக சொல்லப்படும் புவியியல் பகுதி – “ஏதேன் தோட்டம்”. நான்கு நதிகள் பாயும் பகுதி தற்காலத்தில் “ஈராக்'” நாடு,
- இன்று அந்த நதிகளில் இரண்டு டைகிரஸ், யூபிரட்டஸ் என்று அறியப்படுகிறத
மேசியாவைக் குறித்த தீர்க்கதரிசனங்கள்
- ஆதியாகமம் 3:15 இயேசு ஸ்திரியின் வித்து
- ஆதியாகமம் 4:25 சேத்தின் வழிவந்தவர் (ஆதாமிலிருந்து) ஆதியாகமம் 9:26-27- சேமின் வழிவந்தவர் (நோவாவிலிருந்து) .
- ஆதியாகமம் 21:12 -ஈசாக்கின் சந்ததி
- ஆதியாகமம் 25:23 – யாக்கோபின் சந்ததி
- ஆதியாகமம் 49:10 – யூதாவின் வம்சம்
தகர்க்கப்பட்ட 7 உலக தத்துவங்கள்
- 1. “ஆதியிலே தேவன்”- கடவுள் இல்லை என்ற நாத்திக வாதத்தை மறுத்துரைக்கிறது.
- 2. “ஆதியிலே தேவன்” – பலதெய்வங்கள் உண்டு என்ற வாதத்தை மறுத்துரைக்கிறது.
- 3. ஆதியிலே தேவன்”. மனிதனே பிரபஞ்சத்தின் மையமானவன் என்ற வாதத்தை மறுத்துரைக்கிறது.
- 4. “ஆதியிலே தேவன் சிருஷ்டித்தார் – எல்லாம் விதிப்படி நடக்கிறது என்ற வாதத்தை மறுத்துரைக்கிறது.
- 5. “ஆதியிலே தேவன் சிருஷ்டித்தார்” பரிணாம வளர்ச்சியினால் உருமாற்றம் உண்டானது என்ற வாதத்தை மறுத்துரைக்கிறது.
- 6. “தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” – பொருள்முதல்வதம் (பொருட்கள் அழிவதில்லை. உருவாக்கப்படுவதில்லை அவை எப்போதும் இருக்கின்றன) என்ற வாதத்தை மறுத்துரைக்கிறது.
- 7. “தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்”: இயற்கையனைத்தும் இறைவனே. என்ற வாதத்தை மறுத்துரைக்கிறது.
அதிகாரங்களின் சுருக்கமான பொருளடக்கம்
அதிகாரம் 1
-
படைப்பின் விபரிப்பு
-
1ம் நாள் : வெளிச்சம், இரவும் பகலும்
-
2ம் நாள் – : ஆகாயவிரிவு
-
3ம் நாள் : காய்ந்த தரையும், புல்புண்டுகளும்
-
4ம் நாள் – : வானத்தின் ஒளியூட்டிகள்
-
5ம் நாள் – : மீன்களும், பறவைகளும்
-
6ம் நாள் – : நிலத்தில் வாழும் மிருகங்களும், மனிதனும்
அதிகாரம் 3
-
பாவத்தின் ஆரம்பம்
-
விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியை புசிக்க ஆதாமும், எவாளும் சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்படுதல்
-
நல்வாழ்வை இழத்தல்
-
தேவனின் நியாயத்தீர்ப்பு
-
மனித இனத்தின் மீதான தண்டனை
-
முதலாவது ஆடை
-
ஏதேனிலிருந்து துரத்திவிடப்படுதல்
அதிகாரம் 5
-
ஆதாம் முதல் நோவா வரை வம்சவரலாறு
-
ஏனோக்கின் பரிசுத்தமும் தேவனோடு சஞ்சரித்தலும்
-
ஏனொக்கு எடுத்துக்கொள்ளபடுதலும்
அதிகாரம் 8
அதிகாரம் 10
-
நோவாவின் குமாரர்களின் வம்சவரலாறு
-
நோவாவின் குமாரராகிய சேம் காம் யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு
-
முதல் அரசனான நிபரோத் மற்றும் கானானிய வழித்தோன்றல்கள்
அதிகாரம் 12
-
ஆபிராம் அழைக்கப்படுதல்
-
ஆபிராம் ஆரானை விட்டு கானானுக்கு போதல் /
-
எகிப்தில் ஆபிராமும், சாராயும்
-
பார்வோனுக்கு பயந்து ஆபிராம் சாராயை சகோதரியை போல நடத்துதல்
அதிகாரம் 14
-
ராஜாக்களோடு யுத்தம்
-
சோதோமின் ராஜாவோடு இணைந்திருந்த ராஜாக்களுக்கெதிராக நான்க ராஜாக்கள் யுத்தம் செய்தல்
-
ஆபிராம் லோத்தை மீட்டுக்கொள்ளுதல்
-
மெல்கிசேதேக்கு ஆபிராமை ஆசிர்வதித்தல்
அதிகாரம் 16
-
ஆகார் கருவுறுதல்
-
ஆகார் வனாந்திரத்திற்கு ஓடிப்போதலும் திரும்பிவருதலும்
-
ஆபிராமுக்கும், ஆகாருக்கும் இஸ்மவேல் பிறத்தல்
-
ஆகாரும், தேவனுடைய தாதனும்
அதிகாரம் 18
-
தேவனும் இரண்டு தூதர்களும் ஆபிரகாமிடத்தில் வருதல்
-
தேவன் மனிதஉருவில் ஆபிரகாமிற்கு தரிசனமாதல்
-
சாாளுக்கு ஒரு குமாரனை வாக்குபண்ணுதலும், அவள் நகைத்தலும்
-
ஆபிரகாம் தேவனிடத்தில் சோதோமுக்காக வேண்டுதல் செய்தல்
அதிகாரம் 19
-
சோதோம் கொமோராவின் அழிவு
-
சோதோமில் லோத்துவை இரண்டு தூதர்கள் சந்தித்தல்
-
தீயவர்களான சோதோமியர்களுக்கு குருட்டாட்டம் பிடிக்க செய்தல்
-
சோதோம் கொமோரா அழிக்கப்படுதல்
-
லோத்தின் மனைவி உப்புத்தூணாதல்
-
லோத்துவும் அவனது குமாரத்திகளும்
-
முறையற்ற உறவினால் தோன்றிய மோவாப் மற்றும் அம்மோன்
அதிகாரம் 20
-
ஆபிரகாம் கேராரிலே குடியிருத்தல்
-
ஆபிரகாம் அபிமேலேக்கை ஏமாற்றுதல்
-
அபிமேலேக்கிடமிருந்து சாராள் காப்பாற்றபடுதல்
அதிகாரம் 25
அதிகாரம் 26
-
ஈசாக்கு கேராருக்கு போதலும், ரெபெக்காளை குறித்து பொய் சொல்லுதலும்
-
ஈசாக்கு அபிமேலேக்கோடு உடன்படிக்கை செய்தல்
-
பஞ்சம் ஏற்படுதலும் துரவுகள் தோண்டப்படுதலும்
-
ஏசாவின் மனைவிகள்
அதிகாரம் 27
-
ஈசாக்கு முதிர்வயதாகி ஏசாவிடம் வேட்டையாடி சமைத்துக்கொண்டுவர கேட்டல்
-
யாக்கோபு ஏசாவைப்போல நடித்தல்
-
ஏசா ஈசாக்கின் ஆசிர்வாதத்திற்காக கெஞ்சுதல்
-
ஏசா ஈசாக்கை விரோதித்தல்
அதிகாரம் 28
-
ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து ஆரானில் குடியிருக்கும் லாபானிடம் அனுப்பிவிடுநல்
-
ஏசா மீண்டும் திருமணம் செய்தல்
-
யாக்கோபு வானத்தின் நுனியை எட்டியிருந்து ஏணியை சொப்பனத்தில் காணுதலும், வாக்குத்தத்தம் பெறுதலும்
அதிகாரம் 29
-
யாக்கோபு லாபானை சந்தித்தல்
-
யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்படுதல்
-
யாக்கோபு லேயாளையும், ராகேலையும் திருமணம் செய்தல்
-
லேயாளுக்கு ரூபன், சிமியோன். லேவி யூதா பிறத்தல்
அதிகாரம் 30
-
ராகேல் தனது வேலைக்காரியான பில்காளை யாக்கோபுவிற்கு மனைவியாக்குதல்
-
யாக்கோபின் குடும்பமும் ஆஸ்தியும் பெருகுதல்
-
சில்பாள் காத்தையும் ஆசேரையும் பெறுதல்
-
லேயாள் இசக்காரையும், செபுலோனையும் பெறுதல்
-
ராகேல் யோசேப்பை பெறுதல்
அதிகாரம் 31
-
யாக்கோபு இரகசியமாக லாபானை விட்டு கானானுக்கு புறப்படுதல்
-
ராகேல் தனது தகப்பனின் சுருபங்களை திருடிக்கொள்ளல்
-
லாபான் யாக்கோபை தொடர்ந்துபோய் அவனை கண்டுபிடித்தல்
-
லாபானும் யாக்கோபும் உடன்படிக்கை செய்துகொள்ளல்
அதிகாரம் 32
-
யாக்கோபு தூதனோடு போராடுதலி
-
யாக்கோபு ஏசாவை சந்திக்க ஆயத்தப்படுதல்
-
யாக்கோபு தேவனோடு போராடுதல்
-
யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுதல்
அதிகாரம் 42
-
யாக்கோபின் குமாரரின் முதல் எகிப்திய பயணம்
-
யாக்கோபின் பத்து குமாரர் தானியம் வாங்க எகிப்திற்கு செல்லுதல்
-
யோசேப்பு அவர்களை உளவாளிகள் என்று குற்றஞ்சாட்டுதல்
-
பெஞ்சமினை அழைத்துவரவேண்டும் என்ற நிபந்தனையுடன் வீடுவிக்கபடுதல்
அதிகாரம் 43
அதிகாரம் 44
அதிகாரம் 45
அதிகாரம் 48
|
அதிகாரம் 2
-
7ம் நாள் -: வே ஓய்ந்திருத்தல்
-
ஏதேன் தோட்டத்தில் ஆணும் பெண்ணும்
-
படைப்பின் சில விபரிப்புக்கள்
-
முதலாவது பெண்
-
நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்
அதிகாரம் 4
அதிகாரம் 6
அதிகாரம் 7
அதிகாரம் 9
அதிகாரம் 11
-
பாபேல் கோபுரம்
-
உலகம் முழுவதும் பேசப்பட்ட ஒரே மொழி
-
தேவன் மொழியை தாறுமாறாக்குதல்
-
சேம் முதல் ஆபிராம் வரை
-
தேராகு, ஆபிராம், லோத்து ஊர் என்னும் இடத்திலிருந்து ஆரானுக்கு இடம்பெயர்தல்
அதிகாரம் 13
-
ஆபிராம் கானானுக்கு செல்லுதல்
-
ஆபிராமும், லோத்தும் பிரிதலும் லோத்து
-
சோதோமை தெரிந்துகொள்ளலும்
-
ஆபிராமுக்க தேவன் அளித்த மூன்றாவது வாக்குத்தத்தம்
அதிகாரம் 15
-
ஆபிராமுக்கு வாக்குதத்தங்கள் அருளப்படல்
-
400 ஆண்டுகால அடிமைவாழ்வு முன்னுரைக்கப்படுதல்
-
கானான் மீண்டும் வாக்களிக்கப்பட்டு அடையாளத்தினாலும், தரிசனத்தினாலும் உறுதிப்படுத்தபடுதல்
அதிகாரம் 17
அதிகாரம் 21
-
ஈசாக்கின் பிறப்பு
-
ஈசாக்கு இஸ்மவேலினால் பரிகசிக்கப்படுதல்
-
சாராளுக்கும் ஆகாருக்கும் இடையே முறுகல்நிலை உண்டாதல்
-
ஆகாரும், இஸ்மவேலும் வெளியேற்றபடுதல்
-
இஸ்மவேல் பெரியவனாதல்
-
ஆபிரகாம் அபிமேலேக்கோடு உடன்படிக்கை செய்தல்
அதிகாரம் 22
-
தேவன் ஆபிரகாமை சோதித்தல்
-
ஈசாக்கு பலியிடப்படல்
-
ரெபெக்கானின் குடும்பம்
அதிகாரம் 23
-
சாரானின் மரணமும் அடக்கமும்
-
மக்பேலா குகை வாங்கப்படுதல்
-
சாராள் அடக்கம் செய்யப்படுதல்
அதிகாரம் 24
அதிகாரம் 33
அதிகாரம் 34
-
ஏமோரின் குமாரனாகிய சீகேம் தீனாளோடு பலவந்தமாய் சயனித்தல்
-
யாக்கோபின் குமாரர் சீகேம் ஊரார் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள கட்டயப்படுத்தி அதை தங்களுக்குசாதகமாய் பயன்படுத்தி அவர்களை வெட்டிப்போட்டு பட்டணத்தையும் கொள்ளையிடுதல்
அதிகாரம் 35
அதிகாரம் 36
அதிகாரம் 37
அதிகாரம் 38
அதிகாரம் 39
-
யோசேப்பு எகிப்திற்கு கொண்டுபோகபட்டு போத்திபாரினால் விலைக்கு வாங்கப்படுதல்
-
யோசேப்பு போத்திபாரின் மனைவிக்கு உடன்பட மறுத்தல்
-
போத்திபாரினால் யோசேப்பு சிறைக்கு அனுப்பப்படுதல்
அதிகாரம் 40
-
பார்வோனின் வேக்ைகாரர்களின் சொப்பனங்கள் விளக்கப்படுதல்
-
பார்வோனின் வேலைகாரர்களான ரொட்டிசுடுபவனும், திராட்சைரசம் கொடுப்பவனும் குற்றம் செய்ததால் சிறையில் தள்ளப்படுதல்
-
அவர்களது சொப்பனங்களும் விளக்கங்களும்
-
திராட்சைரசம் கொடுப்பவன் விடுவிக்கப்படுதலும், ரொப்டிசுடுபவன் கொல்லப்படுதலும்
அதிகாரம் 41
-
பார்வோனின் சொப்பனங்கள் விளக்கப்படுதல்
-
யோசேப்பு சொப்பனங்களை விளக்குதல்
-
யோசேப்பு எகிப்தின் அதிகாரியாக்கப்படுதல்
-
ஏழு வருடங்கள் செழிப்பும் எழு வருடங்கள் வறட்சியும் உண்டாகுதல்
அதிகாரம் 46
அதிகாரம் 47
-
யோசேப்பின் தகப்பனையும், சகோதரர்களையும் பார்வோன் சந்தித்தல்
-
யாக்கோபு கோசேனில் குடியேறுதல்
-
யோசேப்பு பார்வோனுக்காக முழு எகிப்தின் விளைச்சலையும் கொள்ளுதல்
அதிகாரம் 49
-
யாக்கோபு தனது 12 குமாரரையும் அழைந்தல்
-
யாக்கோபு நனது குமாரர்கள் மீது ஆசிர்வாதம் கூறுதல்
-
யாக்கோபு தனது அடக்கத்தை குறித்து கட்டளை கொடுத்தல்
-
யாக்கோபின் மரணம்
அதிகாரம் 50
-
யோசேப்பு யாக்கோபை கானானில் அடக்கம் செய்தல்
-
தன்னிடத்தில் மன்னிப்பை எதிர்பார்த்த தனது சகோதரர்களிடம் பட்சமாய் பேசுதல்
-
யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
-
யோசேப்பின் மரணம்
|
2 comments on “ஆதியாகமம் Genesis Book Summary with pdf”
S.P.Balan
July 24, 2024 at 7:56 amdear brother in HIM
Greetings to you . we can not download pdf and also copy this page . then how come we use your message to others.
Kindly do any favor
thanking you
Charles Sathish Kumar
July 25, 2024 at 6:41 pmhttps://msk.tamilstudybible.im