சாலொமோனின் உன்னதப்பாட்டு

 

சாலொமோனின் உன்னதப்பாட்டு

Pastor Gabriel Thomasrai

    உன்னதப்பாட்டு ஆக்கியோன்: 

    சாலொமோன் (1:1) சாலொமோன் 1005 பாடல்களை எழுதியவன் (1இரா 4:32) ஆனால் நமக்கு கிடைத்திருப்பதோ அவனது ஒரு பாடல் மாத்திரமே – உன்னதப்பாட்டு

    இதன் தலைப்பு சொல்வதுபோல இது உன்னதமானது

    திறவுகோல் வார்த்தைகள்:

    • “பிரியமே” அவனுக்கான பெயர்

    • . “நேசம்” அவளுக்கான பெயர்

    திறவுகோல் வசனங்கள்:

    • நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.(6:3)

    • திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது. வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும். (8:7)

    சாலோமோனின் உன்னதப்பாட்டு ஒரு உவமை கவிதை. யூதர்கள் இதை வேதாகமத்தின் மகா பரிசுத்த ஸ்தானம் என்று அழைத்தார்கள்

    யூதர்கள் தங்கள் பிள்ளைகள் முப்பது வயது வரும்வரையில் இந்த புத்தகத்தை வாசிக்க அனுமதிப்பதில்லை.

    இந்தப் புத்தகத்தில் உள்ள நான்கு வித்தியாசமான முக்கிய அர்த்தங்கள் 

    1. இது திருமண உறவின் நேசத்தின் மேன்மையை எடுத்துச்சொல்லுகிறது.

    திருமண உறவின் புனிதத்தையும், திருமணம் தேவனால் நியமிக்கப்பட்டதென்பதையும் எடுத்துச் சொல்லுகிறது. திருப்தியான புருஷன், அர்ப்பணித்த மனைவி என்கிற நிலைக்கு இருவரது இருதயங்களையும் இட்டுச்செல்வதாக யூதர்கள் கற்பித்தார்கள். .

    2. இது யெகோவா தேவனுக்கும் இஸ்ரவேலுக்கும் உள்ள நேசத்தை காண்பிக்கிறது. தீர்க்கதரிசிகள் இஸ்ரவேலை யெகோவா தேவனின் மணவாட்டியாக சித்தரித்தார்கள்.

    3. இது கிறிஸ்துவையும் சபையையும் காட்சிப்படுத்துகிறது.

    சபையானது கிறிஸ்துவின் மணவாட்டி என்பது வேதத்தில் காண்பிக்கப்பட்டுள்ள நன்கு பரிச்சயமான உருவகம் (2கொரி 11:2, எபே 5:27. வெளி அதி 21)

    4. கிறிஸ்துவுக்கும் ஒரு தனிப்பட்ட விசுவாசிக்குமான ஐக்கியத்தை சித்தரிக்கிறது.

    ஆத்துமாவிற்கு கிறிஸ்துவோடுள்ள ஐக்கியம் காண்பிக்கப்படுகிறது

    இந்தப் புத்தகத்தின் சுருக்கம்

    அதிகாரம் 1

    1. பாடல் 1:14 – கிறிஸ்துவின் மீதான சபையின் நேசம்

    1. பாடல் 1:5-6 – அவளது குறைவைக் குறித்து அறிக்கையிடல்

    1. பாடல் 1:7 – அவனது மந்தைக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டல்

    1. பாடல் 1:8 – கிறிஸ்து மேய்ப்பனின்

    கூடாரத்திற்கு வழிகாட்டுதல்

    1. பாடல் 1:9-10 – தனது நேசத்தை காண்பித்தல்

    1. பாடல் 1:11 – அவளுக்கு கிருபையுள்ள வாக்குத்தத்தம் அளித்தல்

    1. பாடல் 1:12-17 – கிறிஸ்துவும், சபையும் ஒருவரையொருவர் பாராட்டுதல்

    அதிகாரம் 2

    1. பாடல் 2:1-7 – கிறிஸ்துவும் சபையும் ஒருவருக்கொருவர் பாராட்டும் அன்பு

    1. பாடல் 2:89 – நம்பிக்கை

    1. பாடல் 2:10-13 -சபைக்கான அழைப்பு

    1. பாடல் 2:14-15 – கிறிஸ்து கரிசனை

    கொள்ளும் சபை

    1. பாடல் 2:16-17 – சபையின் பணி, விசுவாசம், நம்பிக்கை

    அதிகாரம் 3

    1. பாடல் 3:15 – சோதனையில் வெற்றிக்காக போராடும் சபை

    1. பாடல் 3:6-11 – கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் சபை

    அதிகாரம் 4

    1. பாடல் 4:17- கிறிஸ்து சபையின் மீது நேசத்தை விபரித்தல்

    1. பாடல் 4:8-15 அவரது அன்பை காண்பித்தல்

    1. பாடல் 4:16 – சபை அவரது

    பிரசன்னத்தில் இருக்க தகுதியாக விண்ணப்பித்தல்

    அதிகாரம் 5

    1. பாடல் 5:1 – கிறிஸ்து தனது அழைப்பால் சபையை எழுப்புதல்

    1. பாடல் 5:2-8 – சபை கிறிஸ்துவின் அன்பை ருசித்தல், நேசத்தால் சோகமாதல் 

    1. பாடல் 5:9.16 – கிறிஸ்துவின் சுபாவம் பற்றிய விபரிப்பு

    அதிகாரம் 6

    1. பாடல் 6:1-3 – சபை கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை பறைசாற்றல் 

    1. பாடல் 6:4-9 – கிறிஸ்து சபையின் சுபாவங்களை விபரித்தல

    1.  பாடல் 6:10-13 – சபையின் மீதான கிறிஸ்துவின் அன்பு

    அதிகாரம் 7

    1. பாடல் 7:19 – சபையின் சுபாவங்கள் குறித்த மேலதிக விபரிப்பு

    1. பாடல் 7:10-13 – சபை தனது விசுவாசத்தையும், விருப்பத்தையும் அறிக்கையிடல்

    அதிகாரம் 8

    1. பாடல் 8:1-5 – கிறிஸ்துவின் மீதான சபையின் அன்பு

    1. பாடல் 8:6-7 – நேசத்தின் வீரியம்

    1. பாடல் 8:8-13 – புறஜாதிகளுக்கான அழைப்பு 

    1. பாடல் &:14 – நிறிஸ்துவின் வருகைக்காக சபை ஜெபித்தல்

    You have to wait 15 seconds.

    Download Timer

    Leave a Reply