கிறிஸ்துவில் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்

கிறிஸ்துவில் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்

கிறிஸ்துவில் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்

பெண்ணின் வித்து

ஆதியாகமம் 3: 15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

கலாத்தியர் 4: 5 காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.

ஆபிரகாமின் சந்ததி

ஆதியாகமம் 22: 18 நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

கலாத்தியர் 3: 16 ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள்பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே.

யூதாவின் சந்ததி 

ஆதியாகமம் 49: 10 சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.

எபிரெயர் 7: 14  நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.

மோசேயைப்போன்ற தீர்க்கதரிசி 

உபாகமம் 18: 15

உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3: 21

உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3: 22

மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3: 23

அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான்.

கிறிஸ்துவுக்கு எதிர்ப்பு. 

சங்கீதம் 2: 1

ஜாதிகள் கொந்தளிப்பானேன்? ஐனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?

சங்கீதம் 2: 2

கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் இராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி: 

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4: 25

புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4: 26

கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4: 27

அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4: 28

ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.

உயிர்த்தெழுதல் 

சங்கீதம் 16: 10

என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.

மாற்கு 16: 14

அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:24-32

ஏளனம்பண்ணப்படுதல் 

சங்கீதம் 22:6-8

மத்தேயு 27:39-43.

ஆடைகள் பங்கிடப்படுதல், சீட்டுப்போடுதல் 

சங்.22:18

யோவா.19:23-24.

எலும்புகள் முறிக்கப்படுவதில்லை 

சங்.34:20

யோவான்.19:33-36.

நண்பன் துரோகியாதல் 

சங்.41:9

மத்.26:14-16.

பரலோகத்திற்கு ஏறிப்போதல் 

சங்.68:18

அப்.1:9; எபே.4:8. மத்.27:34.

கசப்பு கலந்த காடி கொடுக்கப்படுதல் 

சங்.69:21

மத்தேயு 27:34

வலதுபாரிசத்தில் உட்காருதல் 

சங்.110:1

மாற்.16:19; எபி.1:13. எபி.7:17-20.

மெல்கிசேதேக்கின் முறையில் பிரதான ஆசாரியர் 

சங்.110:4

எபிரேய 7:17-20

வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல் மூலைக்குத் தலைக்கல் ஆகுதல் 

சங்,118:22

அப்:4:11-12.

கன்னியின் மகனாகப் பிறந்தல் 

ஏசா.7:14

மத்தேயு.1:20-25. 

செபுலோன் நப்தலி பகுதிகளில் ஊழியம் 

ஏசா.9:1-2

மத்.4:12-16.

பாலகன் பிறந்தார், குமாரன் கொடுக்கப்பட்டார் 

ஏசா.9:6

லூக்.2:11-12; 1 யோவா.4:9, 

சீயோனில் திட அஸ்திபாரமுள்ள மூலைக்கல் 

ஏசா.28:16

1பேது.2:6.

பிரியமானவர் 

ஏசா.42:1

மத்.3:17, 19

முகத்தில் துப்பப்படுதல் 

ஏசா.50:6

மத்.26:67-68; 27:30.

அசட்டைபண்ணப்படுதல் 

ஏசா.53:3

யோவான்.1:11.

வியாதிகளையும் பாடுகளையும் சுமத்தல் 

ஏசா.53:4-5 

மத்.8:16-17.

நமது பாவங்களுக்காகப் பாடுபடல் 

ஏசா.53:5

1 பேதுரு .2:24.

பணக்காரரின் கல்லறையில் அடக்கம் 

ஏசா.53:9

மத்தேயு.27:57-60. 

ஆத்துமாவை மரணத்தில் ஊற்றுதல் 

ஏசா.53:12

லூக்.23:46. 

தேவனுடைய ஆவியானவர் அவர்மேல் இருத்தல் 

ஏசா.61:1

லூக்.4:18-21.

தாவீதின் சந்ததி 

எரே.23:5 

மத்.1:1; ரோம.1:4-5

மேசியா சங்கரிக்கப்படுதல் 

தானி.9:26

மாற்.15:25.

எகிப்தினின்று திரும்புதல் 

ஓசி.11:1

மத்.2:14,21,

பெத்லகேமில் பிறத்தல் 

மீகா 5:2.

லூக்.2:5-7.

கழுதையின்மீது பவனி’ 

சக.9:9

மத்.21:4-9.

கிரயம் 30 வெள்ளிக்காசுகள் 

சக.11:12

மத்.26:15. 

வெள்ளிக்காசுகள் ஆலயத்தில் எறியப்படுதல், குயவனின் நிலம் வாங்கப்படுதல் 

சக.11:13

மத்.27:5-10,

தாங்கள் குத்தினவரை நோக்கிப் பார்த்தல் 

சக.12:10

யோவான். 19:34-37.

மேய்ப்பனை வெட்டு, மந்தைகள் சிதறடிக்கப்படும் 

சக.13:78

மத்.26:31.

Leave a Reply