வேதாகமும் விசுவாசியும்
இந்த தலைப்பின் (வேதமும் விசுவாசியும்) கீழ் நாம் வேதத்திற்க்கும் விசுவாசிக்கும் உள்ள தெடர்பு பற்றி அறிந்துக்கொள்ள இருக்கிறோம்.
1.வேதமும் – விசுவாசியும்: வேதம் விசுவாசிக்கு செய்ய கூடியவைகள்
a) பிரகாசிக்கப்பண்ணுகிறது (சங்கீதம் 119:130)
- உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். சங்கீதம் 119:130
b) பேதையை ஞானியாக்குகிறது (சங்கீதம் 19:7)
- கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19:7
c) விசுவாசத்தை உருவாக்குகிறது (யோவான்20:31)
- இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. யோவான் 20:31
- i) நம்பிக்கையை உருவாக்குகிறது (Psaim 119:49, Romans 15:4)
- ii) கீழ்ப்படிதலை உருவாக்குகிறது (உபாகமம்17:19-20)
d) இருதத்தை சுத்திகரிக்கிறது (யோவான் 15:3, Ephesians 5:26)
- நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள். யோவான் 15:3
i) வழிகளை சுத்திகரிக்கிறது (Psalm 119:9)
- வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே. சங்கீதம் 119:9
e) அழிவுக்குரிய பாதைகளிலிருந்து நம்மை காக்கிறது (சஙீதம் 17:4
- மனுஷரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக் கொள்ளுகிறேன். சங்கீதம் 17:4
(f) ஜீவனை ஆதரிக்கிறது (மத்தேயு 4:4 உபாகமம் 8:3)
- அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். மத்தேயு 4:4
g) விசுவாசத்தில் கட்டி எழுப்புகிறது (அப்போஸ்தலர் 20:32)
- இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். அப்போஸ்தலர் 20:32
(h) ஆறுதல் படுத்துகிறது (சங்கீதம் 119:82. ரோமர் 15:4)
- எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது. சங்கீதம் 119:82
i) கிருபையில் வளரச்செய்கிறது (1 பேதுரு 2:2-3)
- சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு, 1 பேதுரு 2:2
- நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள். 1 பேதுரு 2:3
j) எச்சரிக்கிறது (1 கொரிந்தியர் 10;11)
- இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது. உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. 1 கொரிந்தியர் 10:11
k) இருதயத்தை களிகூறச்செய்கிறது (சங்கீதம் 119:18,111)
- உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். சங்கீதம் 119:18
- உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி. சங்கீதம் 119:111
l) பரிசுத்தமாக்குகிறது (யோவான் 17:17, எபேசியர் 5:26)
- உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்: உம்முடைய வசனமே சத்தியம். யோவான் 17:17
2.வேதமும் – வசுவாசியும் : வேதம் எப்படி இருக்கவேண்டும்.
a) விசுவாசிக்கக்கூட்யதாகவும் (யோவான் 2:22) மற்றும் கீழ்ப்படியக்கூடியதாகவும்
- அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும்இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள். யோவான் 2:22
b) போதிப்பதற்கு நிலையானதாய் இருக்கவேண்டும் (பேதுரு 4:11)
- ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன். ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன். எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக. அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். 1 பேதுரு 4:11
c) ஆர்வமுள்ளதாயிருக்க வேண்டும் (1 கொரிந்தியர் 1:31, 1பேதுரு1:16)
- அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார். 1 கொரிந்தியர் 1:31
d) பொதுவாய் எல்லோருக்கும் வாசிக்கக்கூடியதாய் இருக்கவேண்டும். (அப்போஸ்தலர்13:15)
- நியாயப்பிரமாணமும் தீர்கதரிசனஆகமமும் வாசித்துமுடிந்த பின்பு; சகோதரரே, நீங்கள் ஜனங்களுக்குப் புத்திசொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்று சொல்லும்படி ஜெபஆலயத்தலைவர்கள் அவர்களிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.அப்போஸ்தலர் 13:15
e) அறியப்பட்டதாயிருக்க வேண்டும் (2தீமோத்தேயு 3:15)
- கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். 2 தீமோத்தேயு 3:15
f) தேவனுடைய வார்த்தையாக ஏற்றுக்கொள்ளப் படுவதாயிருக்கவேண்டும் (1 தெசலோனிக்கேயர் 2:13)
- ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம். அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது. 1 தெசலோனிக்கேயர் 2:13
g) சாந்தத்துடன் (யாக்கோபு1:21) ஆராயப்படக்கூடியதாய் இருக்கவேண்டும் (யோவான் 5:39, அப்போஸ்தலர் 17:11)
- ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள். யாக்கோபு 1:21
h) நமது ஆவிக்குரிய எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடியதாய் இருக்கவேண்டும். (எபேசியர் 6:11,17)
- நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். எபேசியர் 6:11
- இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எபேசியர் 6:17
i) ஒவ்வொருவருக்கும் மற்றும் சிறுபிள்ளைகளுக்குக்கூட போதிக்கப்படக்கூடியதாய் இருக்க வேண்டும் (உபாகமம் 6:7, 11:19, நெகேமியா 8:7-8)
- நீ அவைகளை உன் பிள்ளைளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி, உபாகமம் 6:7
j) தொடர்ந்து பேசக்கூடியதாய் இருக்கவேண்டும் (உபாகமம் 6:7)
- நீ அவைகளை உன் பிள்ளைளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி, உபாகமம் 6:7
k) வஞ்சிப்பதற்கேதுவாய் பயன்படுத்தக்கூடாததாய் இருக்கவேண்டும். (2 கொரிந்தியர் 4:2)
- வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம். 2 கொரிந்தியர் 4:2
3. அவிசுவாசிக்கு வேதம் எப்படி இருக்கவேண்டும்
a) மறுபடி ஜெனிப்பிக்கக்கூடியதாய் இருக்கவேண்டும்.(யாக்கோபு1:18, 1 பேதுரு 1:23)
- அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார். யாக்கோபு 1:18
b) துரிதப்படுத்துவதாயிருக்க வேண்டும் (சங்கீதம் 119:50.93)
- அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது. சங்கீதம் 119:50
- நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன், அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர். சங்கீதம் 119:93
c) ஆத்துமாவை ஆதாயப்படுத்துவதாய் இருக்க வேண்டும் (சங்கீதம் 19:7)
- கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19:7
வேதமும் விசுவாசியும் என்ற இந்த பதிவைக் குறித்து மறக்காமல் கமான்ட் பன்னுங்க
2 comments on “வேதமும் விசுவாசியும்”
Pas.Aquila raman.k
November 21, 2025 at 3:48 amJesus Christ bless to you all the time God is with you always God is always with you God bless to you thousand times and family’ also bless ayya this message send to Aquilaraman Bangalore thanks god
Pas Aquilaraman
November 21, 2025 at 9:32 pmVery useful jesus christ words God bless to you always God is with you always God bless to you thousand times and family’ also ayya this message send Pas Aquilaraman Bangalore