You are currently viewing சிலுவையில் இயேசு கூறிய ஏழு உபதேசங்கள் – III

சிலுவையில் இயேசு கூறிய ஏழு உபதேசங்கள் – III

மெய்யான ஆறுதல்

 

சிலுவையில் இயேசு கூறிய ஏழு உபதேசங்கள் – III 

3.  மூன்றாவது உபதேசம்: மெய்யான ஆறுதல்

வேதம் சொல்லுகிறது, அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே அதோ உன் மகன் என்றார் பின்பு அந்தச் சீஷனை நோக்கி அதோ உன் தாய் என்றார். இந்த வசனங்கள் என்ன சொல்லுகிறது என்றால் இயேசுதான் மெய்யான ஆறுதல் அவரால் மாத்திரமே இப்படிப்பட்ட ஆறுதலை இந்த பொல்லாத உலகத்தில் கொடுக்க முடியும் என்பதையே உணர்த்துகிறது.

அதுமட்டுமல்லாமல் பிசாசானவன் ஆண்டவருக்கு விரோதாமாக செய்ய நினைத்த திட்டத்தையும் கர்த்தர் இங்கு முறியடித்தார். பாருங்கள், பிசாசானவன் நினைத்திருக்கலாம் இந்த சிலுவை மரணத்திற்கு பிறகு இந்த தேவன் ஒருபோதும் இவர்களுக்கு ஆறுதலாய் இருக்க முடியாது என்பதாக ஆனால் என்ன நடந்தது. எப்படி இந்த உலகத்தில் மனுஷகுமாரனாய் வாழ்ந்து கொண்டிருந்த வேளையில் எப்படி அனேகருக்கு மற்றும் தம்மை நேசித்த சீஷர்களுக்கும் ஸ்திரீகளுக்கும் ஆறுதல் காட்டி வந்தாரோ அதே போலவே இப்பொழுதும் அவர்களுக்குள் மெய்யான ஆறுதலை உருவாக்கிக் கொடுத்துவிட்டே அவர் சிலுவையில் மரித்தார் என்று சொல்ல வேண்டும். அதாவது எல்லா சூழ் நிலையிலும் அவரால் ஆறுதலை தர முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. பாருங்கள் மோசமான சூழ் நிலைகளுக்குள் கடந்து போகும் போது பவுல் எழுதுகிற ஒரு காரியம் என்னவென்றால் கிறிஸ்துவின் அன்பைவிட்டு என்னை பிரிப்பவன் யார் என்று பிசாசிற்கு சவால் விடுகிறார். ஏனென்றால் பவுலுக்கு தெரியும் எந்த ஒரு சூழ் நிலையிலும் இயேசு என்னை விட்டு விலக மாட்டார் என்பதை நன்றாக தன்னுடைய ஆவியில் அறிந்திருந்தார்.

எனக்குப் பிரியமான ஜனங்களே இயேசுவின் ஆறுதல் கொஞ்ச நாட்களுக்கு மாத்திரம் அல்ல அது நாம் இந்த உலகத்தை விட்டு கடந்து செல்லும் வரைக்கும் நம்மை பின் தொடர்ந்து வருகிறது என்பதை மறந்து விட வேண்டாம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மைப் பார்த்து சொல்லுகிற காரியம் என்னவென்றால், நான் உங்களை ஒருபோதும் திக்கற்றவர்களாக விடேன் – யோவான் 14:18.

Editor

சகோ. எட்வின் கார்டர் (சோஹார் –  ஓமான்

This Post Has One Comment

  1. F Shibu

    Usefull

Leave a Reply