சிலுவையில் இயேசு கூறிய ஏழு உபதேசங்கள் – IV

 

ஜெபம்

சிலுவையில் இயேசு கூறிய ஏழு உபதேசங்கள் – IV 

4.  நான்காவது உபதேசம்: ஜெபம்

வேதம் சொல்லுகிறது, மத்தேயு 27:46 மற்றும் மாற்கு 15:34 – ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு ஏலீ ஏலீ லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். இந்த வார்த்தை நமக்கு எதைக் கற்றுக் கொடுக்கிறது என்றால் நாம் ஒவ்வொரு சூழ் நிலையிலும் ஜெபிக்கிறவர்களாக இருக்க வேண்டும் மற்றும் யாரிடம் ஜெபம் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.

இதோ ஒரு பக்கம் பாவத்தின் நிமித்தம் அழிந்து கொண்டிருக்கிற ஜனங்கள் மற்றொரு பக்கம் அவர் தேவனாயிருந்த போதிலும் தான் எடுத்துக் கொண்ட அவதாரமாகிய மாமிசத்தில் ஏற்பட்ட வேதனைகள் இவைகள் நிமித்தம் அவர் யாரையும் குறை சொல்லவில்லை மற்றும் யாரையும் கடிந்து கொள்ளவும் இல்லை. ஆனால் மிகுந்த மன உருக்கத்துடன் தேவனாகிய பிதாவை நோக்கி விண்ணப்பம் செய்கிறார்.

ஏனென்றால்? அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது பிதாதான் இத்தகைய காரியத்தை அனுமதித்தவர் ஆகவே ஆவர்தான் நம்முடைய வேதனைகளுக்கெல்லாம் பதில் தர முடியும்.

ஏனென்றால் வேதம் சொல்லுகிறது, உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம் பண்ணக்கடவன் என்பதாக யாக்கோபு 5:13 ல் நாம் வாசிக்கிறோம்.

நாமும் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகிற வேதனைகளுக்காகவும் இழப்புகளுக்காகவும் புலம்பிக் கொண்டிராமலும் மனுஷர்களிடம் ஆறுதலுக்காக ஓடாமலும் எல்லாவற்றையுங் குறித்து கவலைப்படாமல் தேவனுக்கு முன்பாக முழங்காலிட்டு ஜெபிக்கத் தொடங்க வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய வாழ்க்கையில் புதிய வெளிச்சம் உண்டாகும் என்பதில் சிறுதும் சந்தேகமேயில்லை. பாருங்கள் சங்கீதக்காரன் தனக்கு விரோதமாக செய்யப்படுகிற எல்லா காரியங்களுக்கும் அவன் பதில் செய்யாமல் எல்லாவற்றையும் தேவனுக்கு முன்பாக ஜெபத்தில் வைப்பதை நாம் எல்லாரும் வேதத்தில் பார்க்க முடிகிறது.

கிறிஸ்துவுக்காக உண்மையாய் வாழ வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அனுபவித்த தாங்க முடியாத வேதனைகள் வரும் ஆகவே இதைக் குறித்து நாம் கவலைப்படாமல் ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையை ஜெபத்தில் கழிக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் தெய்வீக சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.

 

Editor

சகோ. எட்வின் கார்டர் (சோஹார் –  ஓமான்

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page