சிலுவையில் இயேசு கூறிய ஏழு உபதேசங்கள் – V

 

ஆத்தும பசி
சிலுவையில் சிந்திய 7 முத்துக்கள் 05

சிலுவையில் இயேசு கூறிய ஏழு உபதேசங்கள் – V 

5.  ஐந்தாவது உபதேசம்: ஆத்தும பசி

வேதம் சொல்லுகிறது, யோவான் 19:28 – அதன் பின்பு எல்லாம் முடிந்த்து என்று இயேசு அறிந்து வேத வாக்கியம் நிறைவேறத்தக்கதாக தாகமாயிருக்கிறேன் என்றார்.

இந்த வசனம் நமக்கு எத்தகைய காரியத்தை வெளிப்படுத்துகிறது என்றால் தேவனுடைய வருகை மட்டும் அல்லது நாம் இந்த உலகத்தில் இருக்கும் வரை தேவனுக்காக ஓடுவதில் ஒருபோதும் சோர்ந்து விடக் கூடாது அதாவது திருப்தியடைந்து ஒரு இடத்தில் உட்கார்ந்து விடக் கூடாது.

மாறாக நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதாவிடம் கேட்டது போல நாமும் தேவனிடம் இன்னும் அதிகமாக தாகமாய் இருக்க வேண்டும். முக்கியமாக இந்த தாகம் எதில் அதிகமாய் இருக்க வேண்டும் என்று சிந்திப்பீர்களானால், அது, எப்படி நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆத்துமாக்களுக்காக ஓடினாரோ அதே போல நாமும் மரித்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு ஆத்துமாக்காளுக்காக பாரம் கொண்டவர்களாக மாற வேண்டும்.

ஏனென்றால் வேதம் சொல்லுகிறது, தப்பிப் போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன் – யாக் 5:20. இத்தகைய விலையேறப் பெற்ற ஆத்துமாக்களை இழந்து போக மனதில்லாதவராய் நம்முடைய ஆண்டவர் அத்தகைய மரண அவஸ்தையிலும் அழிந்து கொண்டிருக்கிற ஆத்துமாக்களுக்காக கொடிய தாகமுள்ளவராய் மாறினார் என்பதையே இந்த வசனம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

ஆகவே நாமும் இயேசுவைப் போல ஆத்துமாக்கள் மேல் தாகமுள்ளவர்களாய் மாறுவோம் ஏனென்றால் ஆத்துமா ஆதாயம் செய்கிறவன் அதிக நன்மையைப் பிதாவிடம் இருந்து பெற்றுக் கொல்கிறான் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இந்த நாளிலிருந்து ஆத்துமாக்களுக்காக வாஞ்சையாய் ஓடுவோமாக.

Editor

சகோ. எட்வின் கார்டர் (சோஹார் –  ஓமான்

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page