அசனாத்து (ASENATH

அசனாத்து (ASENATH – நெயித் என்ற கடவுளுக்குரியது)

ஒனின் குருவாகிய போத்திபராவின் மகள். பாரவோன் மன்னன். யாக்கோ பின் மகன் யோசேப்புக்கு இவளை மனைவியாகக் கொடுத்தார். இவள் மூலம் யோசேப்புக்குப் பிறந்தவர்கள் மனாசே, எப்பிராயிம் என்பவர்கள் ஆவர். (ஆதி) 41:45.50-52: 46:20)

கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் கிரேக்கப் போலிநூலில் இவளது புற இனத் தன்மையை மாற்றி விளக்கம் அளித்தனர். இவளைச் செக்கேம்-தீனா ஆகியோரின் மகள் என்று கூறி அவளை ஒரு எபிரேயப் பெண்ணாக்கினர். அவளை போத்திபரா தத்து எடுத்துக் கொண்டார். மற்றொரு பாரம்பரியம், இவளை எகிப்தியள் ஆக்கியது. ஆனால் அவள் யோசேப்பால் யாவே வழிபாட்டுக்கு மதமாற்றப்பட்டாள்.

 

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *