திரித்துவம் ஒரு தெளிவான விளக்கம்
வேதத்திலுள்ள உபதேசங்களில், பலரால் பல கோணங்களில் பேசப்படும் திரித்துவக் கொள்கை வேதத்தின் அடிப்படையில் காண்போம்
தேவத்துவம்
வேதத்தில் தேவனைக்குறிக்கும் மிகவும் முக்கியமான எபிரெய மொழி சொற்கள் ஏலோஹிம், யேகோவா என்பவையாகும். ஆங்கிலத்தில் ஆடு என்பதற்குப் பயன்படுத்தப்படும் Sheep என்ற ஒருமை சொல்லின் பன்மையும் Sheep என்பதுபோன்று ஏலோஹீம், யேகோவா என்பன ஒருமையாகவும் பன்மையாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆதி.1:1 (2) ஆதி.19:24. ஆதி.3:22 இல் தேவனாகிய கர்த்தர் (ஏலோஹீம், யேகோவா) “இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல ஆனான்” என்று கூறியதிலிருந்து இச்சொற்கள் பன்மையைக் குறிப்பதை நாம் காண்கிறோம். மேலும் நம்மில் ஒருவரைப்போல்’ என்று கூறியுள்ளதால், தேவத்துவத்தில் ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் இருப்பது சந்தேகமின்றி நிறுவப்படுகிறது.
வார்த்தை தேவனிடத்திலிருந்தது, தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார் (யோவா.1:1-2) என்ற வசனங்களும் ஒன்றுக்கு மேற்பட்ட தேவனைக் குறிக்கின்றன.
எபி.1:9 இலும் தேவன் என்று இரு நபர்கள் கூறப்பட்டுள்ளனர். மேலும், கர்த்தர் (யேகோவா) என்று இரு நபர்கள் குறிப்பிடப்பட்டிருப்பதை ஆதி 19:24 இலும் சக.3:2 இலும் காண்கிறோம்.
பன்மையாக இருக்கும் தேவனைத் தேவத்துவம் என்றும் வேதம் குறிப்பிடுகிறது (கொலோ.2:9, ரோம.1:20).
பிதா, குமாரன், ஆவியானவர் மூவரும் தேவன், மூவரும் கர்த்தர்
தேவத்துவத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்ற மூன்று தனித்தனி நபர்கள் இருப்பதை லூக். 1:35; 3:22; யோவா.1:33-34; 14:16, 26; 2 கொரி.13:14; எபே.4:3-6 என்ற பகுதிகளினின்று அறிந்து கொள்கிறோம்,
பிதா – தேவன்
- ரோம்.1:3; பிலி.2:11 போன்ற பல வேத வசனங்கள் பிதாவைத் தேவன் என்று அழைக்கின்றன.
இயேசு கிறிஸ்து – தேவன்
- ஏசா.9:6-7; யோவா.1:1-2; 20:28; அப்.20:28; ரோம.9:5; தீத்.2:13; எபி.1:8-9; 1 யோவா.5:20 என்ற வேதப்பகுதிகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தேவன் என்று கூறுகின்றன.
ஆவியானவர் – தேவன்
- அப்.5:3-4 வசனங்களில் பரிசுத்த ஆவியானவர் தேவன் என்று அழைக்கப்பட்டுள்ளார்.
எனவே பிதா, குமாரன், ஆவியானவர் ஆகிய மூவரும் தனித்தனியே தேவன் என்று அழைக்கப்பட்டுள்ளனர்.
பிதா – கர்த்தர்
- பிதாவைக் கர்த்தர் என்று சங்.110:1 போன்ற பல இடங்கள் குறிப்பிடுகின்றன.
இயேசு கிறிஸ்து – கர்த்தர்
- பழைய ஏற்பாடு இயேசுவை யேகோவா (கர்த்தர்) என்று அழைக்கிறது ஏசாயா 40:3 எரே.23:5-6; 33:15-16), கிறிஸ்துவைக் கர்த்தர் என்று புதிய ஏற்பாட்டின் பல இடங்களில் காட்டிருப்பதும் நாம் அறிந்ததே.
பிதா – கர்த்தர்
- பரிசுத்த ஆவியானவரும் கர்த்தர், என்று 2கொரி.3:17 கூறுகிறது.
எனவே இம்மூவரும் கர்த்தர் என்பது தெளிவு.
மூன்று வெவ்வேறு நபர்கள்
மூன்று பேரும் வெவ்வேறு நபர்கள் என்பதை
லூக் 1:35 இல்
- பரிசுத்த ஆவியானவர் நிழலிட்டார்,
- பிறந்தவர் இயேசு, ‘அவர்
- தேவனுடைய குமாரன்’
என்பதால் அறிந்துகொள்கிறோம்.
மத்.3:16-17 இல்
- இயேசு பூமியிலிருந்த போது
- தேவ ஆவியானவர் புறாவைப் போல இறங்கி வந்தார்,
- பிதாவானவர் வானத்திலிருந்து பேசினார்
என்பது மூவரும் வெவ்வேறு நபர்கள் என்பதைத் தெரிவிக்கிறது.
யோவா.14:16 இல்
- இயேசு பிதாவை வேண்டிக்கொள்வதாக சொல்வதாலும்
- பிதா
- வேறொரு தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவரைத் தந்தருளுகிறார் என்பதாலும்
மூவரும் வெவ்வேறு நபர்கள்.
ஏனெனில்,
- வேண்டிக்கொள்கிறவர்,
- வேண்டிக்கொள்ளப்படுகிறவர்
- தந்தருளப்படுகிற வேறு ஒருவர்
ஆகிய மூன்று பேரை இவ்வசனம் கூறுகிறது.
ஏசா.1:1-2; 42:1; 48:16; 61:1-2 1:23: அப்.2:33-34; 10:38; வெளி1:4-97 31 போன்ற பகுதிகளை ஆராய்ந்தால் பிதா குமாரன் ஆவியானவர் ஆகிய மூன்று வெவ்வேறு நபர்களைக் காணலாம்.
பிதாவும், கிறிஸ்துவும் வெவ்வேறு நபர்கள்
பிதாவும் கிறிஸ்துவும் வெவ்வேறு நபர்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு.
சங்.2:7-8 இல்
- பிதா குமாரனை நோக்கிப் பேசுவதும், நீர் என்னுடைய குமாரன் என்று பிதா கூறுவதும், என்னைக் கேளும் என்றும் உமக்குச் சொந்தமாகக் கொடுப்பேன் என்றும் கூறுவதும் இரு வெவ்வேறு நபர்களைக் குறிக்கிறது என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.
இவ்வாறு பிதா குமாரனிடம் பேசியதும், குமாரன் பிதாவிடம் பேசியதும் வேதத்தின் பல பகுதிகளில் உள்ளன.
- ‘பிதாவே… உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்’ என்றும் இயேசு கூறியுள்ளார் (யோவா.11:41).
- இயேசுதான் பிதா எனில், அவர் தம்மை நோக்கி ஜெபிப்பதாகவும், தம்மையே ஸ்தோத்திரிப்பதாகவும் இப்பகுதிகள் கூறுகின்றன. இவ்வாறு இருக்கமுடியாது.
எனவே இருவரும் வெவ்வேறு நபர்கள்.
பிதாவின் வலது புறத்தில் குமாரன் உட்கார்ந்திருப்பதை சங்.110:1; மத்.22:44; 26:64; மாற்.16:19; எபே.1:21 போன்ற வசனங்கள் கூறுகின்றன. ஒருவர் தனது வலது புறத்தில் உட்காரமுடியாது என்பதால் இருவரும் ஒருவர் அல்ல.
“பிதாவுக்கு தெரிந்த சில குமாரனுக்குத் தெரியாது (மாற்.13:32)” என்பது இருவரும் வேவ்வேறு நபர்கள் என்பதற்கு ஆதாரமாகும்.
பிதா இயேசுவை அனுப்பினார் (யோவா.8:42), இயேசு பிதாவிடம் திரும்பிச் சென்றார் (யோவா.16:5) என்பவை அவர்கள் இரு நபர்கள் என்பதைத் தெரிவிக்கின்றன.
இயேசு பிதாவை ‘என் பிதா என்று குறிப்பிட்டுள்ளார். (யோவான் 15:1; 20:17; வெளி.2:26). பிதா இயேசுவைத் தமது குமாரன்’ என்று கூறியுள்ளார் (மத்.3:17; 17:5). ஒருவர் தமக்கே குமாரனாயிருப்பதும் தமக்கே பிதாவாயிருப்பதும் எப்படி?
மேலும் பரலோக அரசில் யாருக்கு எந்த இடம் என்று தீர்மானிப்பது குமாரனல்ல, பிதா மட்டுமே என்பது இருவரும் ஒருவரல்ல என்பதைப் பறைசாற்றுகிறது.
இயேசு சிலுவையில் தொங்கியபோது ஏன் என்னைக் கைவிட்டீர்’ என்று கூறினார் (மத்.27:46). ஒரு நபர் தம்மையே கைவிடுவதாகக் கூறுவது பொருந்தாது என்பதால் பிதாவும் குமாரனும் வெவ்வேறு நபர்கள்.
மேலும் இயேசு தமது சித்தத்தையல்ல, பிதாவின் சித்தத்தையே செய்வார் என்பதையும் (மத்.26:39; யோவா.5:30; 6:38)
இயேசுவின் உபதேசம் அவருடையதல்ல, பிதாவினுடைய (யோவா.7:16-18; 8:26-28) என்பதையும்
இயேசு தம்மைத்தாமே மகிமைப்படுத்தவில்லை, பிதா மகிமைப்படுத்தினார் (யோவா.8:54) என்பதையும்
இயேசுவைக்குறித்துப் பிதா சாட்சி கொடுத்தார் (யோவா.5:37; 8:18) என்பதையும்
இயேசு தனித்திராமல் பிதாவோடு இருந்தார் (யோவா.8:16) என்பதையும்
கவனித்தால் இயேசுவும் பிதாவும் வெவ்வேறு நபர்கள் என்று காணலாம். மேலும், இயேசுவைவிடப் பிதா பெரியவர் என்பது இயேசுவும் பிதாவும் வெவ்வேறு நபர்கள் என்பதை நிறுவுகிறது.
ஏனெனில் ஒருவர் தம்மைவிடப் பெரியவராயிருக்க முடியாது (யோவான்.14:28; 1 கொரி.11:3).
இன்னும் அநேக வேத வசனங்கள் பிதாவும் குமாரனும் ஒன்றல்ல என்று நிறுவுகின்றன. மத்.7:21; 11:27; 18:10,35; 28:19; லூக்.2:49; யோவா.5:19,27; :3214:1-9; 15:24; 16:3; அப்.2:33-36; எபே.1:20-21; பிலி.2:9-11; எபி.12:2; 1 பேது.3:22; வெளி.1:1 காண்க.
ஆவியானவர் தனிநபர்
பிதாவிலும் குமாரனிலுமிருந்து ஆவியானவர் வேறுபட்டவர் என்பதைக் கீழே தரப்பட்டுள்ள குறிப்புகள் நிறுவுகின்றன.
- ஆவியானவர் வேறொரு தேற்றரவாளன் (யோவா.14:16,26; 15:26; 16:7,15).
- பிதாவிலும் குமாரனிலுமிருந்து வேறுபட்டவராகக் காணப்பட்டுள்ளார் (முத்.3:16-17; வெளி.4:5),
- இயேசு மகிமைப்படும் வரை அவர் பிதாவிடமிருந்து அனுப்பப்படவில்லை (யோவான்.7:37-39; அப்.2:33-34),
- பிதாவும் குமாரனும் ஆவியானவரை அனுப்பினார்கள் (யோவா.14:16,26) என்பதால் அனுப்பியவர்களிடமிருந்து அனுப்பப்பட்டவர் வேறுபட்டவர்.
- யோவா 14:16 இல் வேண்டிக்கொள்பவர் இயேசு, வேண்டுதலைக் கேட்கிறவர் பிதா அனுப்பப்பட்டவர் பரிசுத்த ஆவியானவர்.
- குமாரனுக்கு விரோதமான தவறான சொற்கள் மன்னிக்கப்படும், ஆவியானவருக்கு எதிரான சொற்கள் மன்னிக்கப்படமாட்டாது (மத்.12:31-32; மாற்.3:29-30; லூக்.12:10) என்பது இவர்கள் வெவ்வேறு நபர்கள் என்பதற்குத் தெளிவான சான்று.
- இயேசு உலகிற்குக் கொடுக்கப்பட்டு (யோவான்.3:16), இவ்வுலகில் மனிதனாக இருந்தபோது ஆவியானவர் கொடுக்கப்படவில்லை (யோவா.7:39)
- ஆவியானவர் தம்மை மகிமைப்படுத்தும்படி வராமல் இயேசுவைக்குறித்துப் பேசி அவரை மகிமைப்படுத்து வதற்காக வந்தார் (யோவான்.16:7-15).
- கிறிஸ்து மரியாளின் கர்ப்பத்தில் உருவானதிலும் (லூக்.1:35) கிறிஸ்துவின் திருமுழுக்கின் போது (மத்.3:16) கிறிஸ்துவை வனாந்தரத்திற்குக் கொண்டு சென்றதிலும் (மத்.4:1) ஆவியானவர் இயேசுவிலிருந்து வேறுபட்டவர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இதைப்போன்ற அநேக வேதப்பகுதிகள் ஆவியானவரின் தனித்தன்மையை நிறுவுகின்றன. வெளி.2,3 அதிகாரங்களில் ஏழு சபைகளுக்குக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு செய்தியிலும் கிறிஸ்து பேசுவதாகத் தொடங்கும் செய்தி ஆவியானவர் பேசுவதாக முடிகிறது என்று காண்கிறோம். கிறிஸ்து ஆவியானவர் மூலம் பேசியதால் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.
தேவன் ஒருவரே
ஆனால் தேவன் ஒருவரே என்றும், கர்த்தர் ஒருவரே என்றும் வேதத்தின் பல வசனங்கள் கூறுகின்றன. உபா.4:39; 6:4; ஏசா 46:9; சங்.14:9; மத் 4:10; மாற். 12:29: யோவா .17:3; ரோம 16:27; 1கொரி .8:4,6; எபே.4:6; 1 தீமோ.2:5; 6:15-16; யூதா 4 போன்ற பகுதிகள் இதற்கு எடுத்துக்காட்டுகள்.
ஒருவரா மூவரா
ஒருவரா, மூவரா? என்ற கேள்விக்குப் பதில் காண்பதில் பலர் பல கருத்துகளைக் கூறியுள்ளார். இதைக்குறித்த மூன்று முக்கிய கருத்துகளைக் காண்போம்
1. ஒருமைக்கோட்பாடு:
‘மூவரும் ஒருவர்தான், அவர்தான் பிதா.
- அதாவது பிதாதான் இயேசுவும் ஆவியானவரும்’ என்று ஒரு குழுவினர் கூறுகின்றனர்.
‘மூவரும் ஒருவர்தான்,
- அவர்தான் இயேசு. அதாவது இயேசுதான் பிதா, இயேசுதான் குமாரன், இயேசுதான் ஆவியானவர்’
என்று இன்னொரு குழுவினர் கூறுகின்றனர்.
இதற்கு ஆதாரமாக யோவா.10:30; 12:45; 14:7,9,10; 17:22; 1 யோவா.5:7 போன்ற பகுதிகளில்
- நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்,
- என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்
என்பது போன்ற கருத்துகளைக் கூறுகின்றனர்.
இவர்கள் கூறுவது தவறு என்பதை இக்கட்டுரையில் இதற்கு முன்பகுதியில் இருந்து நன்கு தெரிந்து கொள்ளலாம். ஏனெனில் மூவரும் தனித்தனிநபர்கள் என்பதை அப்பகுதி நிறுவுகிறது.
2. மனிதனால் புரிந்து கொள்ள முடியாது என்ற கருத்து:
- “மூன்று நபர்கள் இருப்பது உண்மைதான் தேவன் ஒருவரே,
- கர்த்தர் ஒருவரே என்று வேதம் கூறுவதால் அதுவும் உண்மையே.
- எனவே மூவரும் ஒருவர் என்பது உண்மை .
- எனினும், அதன் நுணுக்கங்கள் மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்டவை. மனிதனால் புரிந்துகொள்ள இயலாது’
என்பது பெரும்பாலான கிறிஸ்தவர்களின் கருத்து.
- இவ்வாறு கூறுவதற்கு
- ‘மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள் (உபா.29:29) என்ற வசனமும்
- ‘காரியத்தை மறைப்பது தேவனுக்கு மகிமை’ (நீதி 25:2) என்ற வசனமும் ஆதாரங்களாக அமைகின்றன
3. மூவர் ஒரு மனதுடனும் மிகுந்த ஒற்றுமையுடனும் செயல்படும் தேவத்துவம் என்ற கருத்து :
தேவன் ஒருவரே என்று கூறும் வசனப்பகுதிகளை ஆராய்ந்துபார்ப்போம். ஒன்று என்றால் என்ன? ‘என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்… பிதா என்னிலும் நான் பிதாவிலும்., என்று இயேசு கூறியதின் விளக்கங்கள் என்ன?
அ) ஒன்று என்றால் என்ன பொருள்
ஒன்று என்பது எண்ணிக்கையில் ஒன்று என்பதைக் குறிக்காமல் ஒற்றுமையில் ஒன்று என்பதைக் குறிக்குமாறு பயன்படுத்தப்பட்டுள்ளது. யோவா.17:11 ல் ‘நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாய் இருக்கும்படிக்கு…’ என்று இயேசு கூறியுள்ளார். இயேசுவின் சீடர்கள் எண்ணிக்கையில் ஒன்று அல்ல, யோவான்.17:22 ல் ‘நாம் ஒன்றாய் இருக்கிறது போல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படிக்கு… என்று மீண்டும் கூறியுள்ளார். ஒன்று என்பது சீடர்கள் எண்ணிக்கையைக் குறிக்காமல் ஒரு மனதோடும் ஒற்றுமையோடும் இருப்பதைக் குறிக்கிறது. இவ்வாறே ‘நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்’ என்று இயேசு யோவான்.10:30; 17:22 இல் கூறியிருப்பது ஒரே தன்மை உடையவர்களாயிருப்பதையும் (One In substance and qualities) ஒற்றுமையாக ஒரே சிந்தனை உடையவர்களாயிருப்பதையும் குறிப்பிடுகிறது.
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்’ என்றுதான் இயேசு கூறினார். ‘நான்தான் பிதா’ என்று அவர் சொல்லவில்லை. 1 யோவான்.5:7 இல் ‘பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்’ என்பது அவர்கள் மூவர் என்பதையும் அவர்கள் தன்மையிலும் ஒற்றுமையிலும் ஒரு மனத்திலும் ஒன்றாக இருக்கிறது என்பதையும் தெளிவாக கூறுகின்றது. ஒன்று’ என்ற சொல் அதே பொருளில் 1 கொரி.3:6-8 இல் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் காண்க. இப்பகுதியில் நான் நட்டேன், அப்பொல்லோ சீர் பாய்ச்சினான்’ என்று கூறிய பவுல் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இந்த இடத்திலும் ஒன்று என்பது எண்ணிக்கையைக் குறிப்பிடாமல் ஒரு மனதுடன் செய்ததைக் குறிப்பிடுகிறது. இவ்வாறு, நாங்கள் யாவரும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருக்க கவா.3:28) என்றும் தேவனை ஒரே வாயால் மகிமைப்படுத்தும்படி க்கு ஒன்றாய் இருக்கிறீர்கள் (ரோமர் 15:5) ‘ (கலா.3:28) என்றும் ‘தேவனை ஒரே என்று எழுதப்பட்டுள்ள இடங்களிலும் ஒன்று என்பது எண்ணிக்கையை குறிக்காது என்பதை எளிதில் காணலாம். இதைப்போன்றே ‘நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்’ என்று இயேசு கூறியது (யோவான்.10:30) எண்ணிக்கையில் ஒன்று என்பதைக் குறிக்காமல், தன்மையிலும், ஒற்றுமையிலும் ஒன்றாயிருப்பதையே குறிக்கிறது
ஆ) இயேசுவைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்பதின் விளக்கம்
என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்’ (யோவான்.12:45) என்றும் என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்’ (யோவான்.14:9) என்றும் இயேசு கூறியுள்ளார். இதற்கான விளக்கம் கொலோ 2:9; 1:15; எபி.1:3 இல் உள்ளது. தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாகக் கிறிஸ்துவுக்குள் வாசமாயிருக்கிறது’ என்பதாலும் (கொலோ.2:9) கிறிஸ்து தேவனுடைய தற் சுரூபமா இருக்கிறார்’ என்பதாலும் (கொலோ.1:15) ‘கிறிஸ்து பிதாவுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாய் இருக்கிறார்’ (எபி.1:3) என்பதாலும் தம்மைக் கண்டவர்கள் பிதாவைக் கண்டவர்கள் என்றும் (யோவான்.12:45; 14:9) தம்மை அறிந்தவர்கள் பிதாவை அறிந்துள்ளனர் என்றும் (யோவான்.14:7) இயேசு கூறினார். மேலும் யோவா.12:45 ஐக் கூறுவதற்கு முன் அதற்கு முந்திய வசனத்திலும், யோவான்.14:7-11,20 ஐக் கூறுவதற்கு முன் யோவா.14:1-2,6 இலும் தானும் பிதாவும் வெவ்வேறு நபர்கள் என்பதை தெரியப்படுத்திய பின்னரே அவற்றைக் கூறியுள்ளார் என்பதைக் கவனிக்க. ‘என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்றுதான் கர்த்தர் கூறினார். நான்தான் பிதா’ என்று கூறவில்லை
இ) பிதா குமாரனிலும் குமாரன் பிதாவிலும் இருப்பதென்றால் என்ன
தாம் பிதாவிலும் பிதா தம்மிலும் இருப்பதாக யோவா.14:10,11 இல் இயேசு கூறியுள்ளார். இது நாம் கிறிஸ்துவிலும் கிறிஸ்து நம்மிலும் இருப்பதைப் போன்றது (யோவான்.14:20; 15:5; 2 கொரி.5:17; ரோம.8:10).
தேவத்துவத்தின் தலைமை
பிதாவும் குமாரனும் சமமானவர்கள் என்பதை, கிறிஸ்து என்ற கட்டுரையில் ‘கிறிஸ்து பிதாவுக்குச் சமமானவர்’ என்ற பத்தியில் குறிப்பிட்டுள்ளேன் இவ்வாறே ஆவியானவர் பிதாவுக்கும் குமாரனுக்கும் சமமானவர் என்பதைத் தூய ஆவியானவர் கட்டுரையில் ஆவியானவர் பிதாவுக்கும் குமாரனுக்கும் சமமானவர் என்ற பத்தியில் குறிப்பிட்டுள்ளேன். இவர்கள் சமமாயிருந்தபோதிலும் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரான தேவத்துவத்தின் தலைவராகப் பிதாவாகிய தேவன் செயல்படுகின்றார் (யோவா.14:28; 1 கொரி.11:3; 15:28} பிதா தலைவராகச் செயல்படுவார் குமாரன் பிதாவுக்குக் கீழ்ப்பட்டிருப்பார் என்று 1 கொரி.15:28 கூறுகிறது.
இந்நிலையில் பிதாவானவர் கிறிஸ்துவுக்குத் தேவன் என்று அழைக்கப்படுகின்றார் (யோவா.20:17; எபி.19 வெளி.1:6); குமாரளைவிடப் பெரியவராகவும் கருதப்படுகிறார் (யோவா.10:29; 14:28). மேலும், மூவரும் தனித்தனியே தேவன் என்று அழைக்கப்பட்டபோதிலும் சில இடங்களில் பிதாவாகிய தேவனை மட்டும் தேவன் என்று அழைக்கும் பகுதிகளும் வேதத்தில் உண்டு (மத்.4:10; யோவா.17:3; ரோம.16:27; எபே 4:6; 1 தீமோ.2:5 யோவான்.5:9; யூதா 4). கிறிஸ்து மட்டுமே தேவன் என்று அழைக்கப்படும் பகுதிகளையும் ஆவியானவர் மட்டும் தேவன் என்று அழைக்கப்படும் பகுதிகளையும் ஏற்கெனவே பார்த்தோம்
திரித்துவம் என்பதின் விளக்கம்
மேற்கண்ட வற்றிலிருந்து நாம் அறிந்துகொள்வது என்னவெனில் ‘தேவத்துவத்தில் மூன்று நபர்கள் உள்ளனர். மூவரும் ஒரே தன்மையும் ஒரு மனமும் ஒற்றுமையும் உடையவர்கள். தனித்தனியே ஒவ்வொருவரையும் தேவன் என்றும் கர்த்தர் என்றும் அழைக்கலாம். மூவரையும் சேர்த்து தேவன் என்றும் கர்த்தர் என்றும் அழைக்கலாம். தனித்தனியே தேவன் என்று அழைக்கப்படும் இடங்களைத்தவிர, மற்ற பல பகுதிகளில் ஒரே தேவன் என்பது ஒரே தேவத்துவமாகிய பிதா குமாரன் பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது’ என்பதாகும். மூவரையும் சேர்த்து தேவன் என்று கூறும் ஏராளமான பகுதிகள் வேதத்தில் உண்டு. மிகவும் தெளிவாகத் தெரிகிற ஆதி.1:26; ஏசா.6:8; யோவா.14:25; 17:11,22-23 போன்ற பகுதிகள் இதற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றன.
மேலும் பல மனிதர்களாலான கிறிஸ்துவின் சரீரமாகிய சபை ஒரு மனிதனாகக் கூறப்பட்டுள்ளதுபோன்று தெச.2:7-8 தேவத்துவத்தை ஒரு நபராக யாத் 20:3; உபா.4:39; 6:4 ஏசா.44:6,8,21,45:21; 46:9, ஓசி.13:4; மாற்.12:29 போன்ற பல பகுதிகள் கூறுகின்ற ன. ஒருவரைக் கூறும் பகுதிகளையும் மூவரையும் கூறும் பகுதிகளையும் கருத்தூன்றிப்படிப்பது நமது கடமையாகும்.
இது வாழ்வியல் விளக்கவுரையில் இருந்து எடுக்கப்பட்டது.
Pastor. Charles Sathish Kumar,