இயேசு கிறிஸ்துவைத் தொழுதுகொள்ளலாமா…?
காத்தராகவும் ஆண்டவராகவும் தேவனாகவும் இருக்திற இயேசுகிறிஸ்துவை (இதற்கு முந்தைய கட்டுரை காண்க) ஆராதிக்க கூடாது என்று கூறும் ஒரு கூட்டத்தினர் உலகெங்கும் பெருகி வருகின்றன. ஆனால் இயேசுவைப் பலர் தொழுதுகொள்வதை வேதம் கூறுகிறது.
இயேசுவைத் தொழுதுகொண்டவர்கள்
- சாஸ்திரிகள் – மத.2:11
- மத்.8:2 – தொழுநோயாளி
- மத்.9:18 – – ஒரு தலைவன்,
- மத்.14:33 – – சீடர்களும் படகில் இருந்தவர்களும்,
- மத்.15:25 – – கானானியப் பெண்,
- மத்.28:9) – பெண்கள்,
- மத்.28:17 – சீடர்கள்
- மாற்.5:6 பிசாசு பிடித்தவன
- லூக் 8:41 – ஜெப ஆலயத் தலைவனான யவீரு,
- லூக்கா 24:52 சீடர்கள்
- யோவான் 9:38 – கண் திறக்கப்பட்ட குருடன்,
- எபி.1:6 – தேவ தூதர்கள்,
- வெளி.5:8-10 நான்கு ஜீவன்களும் இருபத்து நாலு மூப்பர்களும்,
இயேசு இந்தத் தொழுகைகள் யாவற்றையும் ஏற்றுக்கொண்டார். எனவே இயேசுவை தொழுதுகொள்வது சரியானது, அவசியமானது, மேன்மையானது என்றும் அது நமது கடமையென்றும் காண்கிறோம்
பிதாவும் குமாரனும்
– பிதாவாகிய தேவனைக் கனம் பண்ணும் அளவிற்குக் குமாரனையும் கனம்பண்ணும்படி எதிர்பார்க்கப்படு கிறோம் (யோவா.5:22-23). இயேசுவை தொழுதுகொள்ளாவிட்டால் பிதாவையும் தொழுதுகொள்ளவில்லை என்று ஆகிவிடும்
உறுதியான சான்று
-10-14: 1 கொரி.1:2; பிலி.2:10 என்ற பகுதிகளை வாசித்தால் இயேசுவைத் தொழுதுகொள்வதில் இருக்கும் சந்தேகம் தீர்த்துவிடும் அப்போஸ்தலரும் ஆதி சபையினரும் இயேசுவின் நாமத்தை தொழுதுகொண்டார்கள் என்பதை அப்.9:10-14 இலிருந்து காண்கிறோம். இவற்றிற்கு மேலாக, கொரிந்தியர் நிருபம் கொரிந்தியருக்கு மட்டுமின்றி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதப்பட்டுள்ளது. அதாவது, கிறிஸ்துவைப் பின்பற்றுகிற யாவரும் கிறிஸ்துவைத் தொழுது கொள்ள வேண்டும் என்பதையும் கிறிஸ்துவைத் தொழுது கொள்ளுகிற அவர்களுக்கு இந்நிருபம் எழுதப்பட்டது என்பதையும் அவரைத் தொழுதுகொள்ளாதவர்கள் அவருடையவர்கள் அல்ல என்பதையும் இது நிறுவுகிறது. மேலும் இயேசுவின் நாமத்தில் வானோர், பூதலத்தோர், பூமியின் கீழானவர் ஆகியோருடைய முழங்கால் யாவும் முடங்கும் என்பது இவர்கள் யாவரும் இயேகவைத் தொழுதுகொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கிறது அல்லவா (பிலி.2:10)? யாவரும் இயேசு கிறிஸ்து கர்த்தர் என்று அறிக்கைபண்ணுவார்கள்
கிறிஸ்துவைத் தொழுதுகொள்ளக்கூடாது என்று சிலர் கூறுவதால் இந்த விளக்கத்தை எழுத அவசியம் ஏற்பட்டது. நாம் திரித்துவ தேவனைத் தொழுதுகொள்ள அழைக்கப்படுகிறோம். பிதாவைமட்டும், கிறிஸ்துவை மட்டும் ஆவியானவரை மட்டும் தொழுது கொள்வது சிறந்ததன்று. மூவரும் தொழுகைக்கு உரியவர்களே,