குமாரனாகிய கிறிஸ்து
கிறிஸ்து என்றால் பொருளென்ன?
கிறிஸ்து என்ற கிரேக்கச் சொல் (கிறிஸ்டோ) அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்ற பொருள் கொண்டது இதன் எபிரேயச் சொல் மேசியா என்பதாகும். இயேசு என்றால் இரட்சகர் என்று பொருள், (மத்.1:21). பரிசுத்த ஆவியானவரின் செயலினால் கன்னிமரியாளிடம் உருவாகிப் பிறந்த இயேசுவை (மத்.1:18-25; லூாக்.1:30-35- தேவன் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம்பண்ணினார் (மத்.3:16-17; யோவா.3:34 அப்.10:38) அபிஷேகம் பண்ணப்பட்ட இயேசுவை நாம் இயேசு கிறிஸ்து என்று அழைக்கிறோம்.. இயேசு அபிஷேகம் பண்ணப்பட்டவர் மட்டுமின்றி, தம்மை விசுவாசிக்கிறவர்கள் வாஞ்சையோடு கேட்கிறவர்களுக்கு பாத்த ஆவியினால் அபிஷேகம் யணனுகிறவராகவும் இருக்கிறார் (மத்.3:11).
இயேசு இவ்வுலகில் மனிதனாக வாழ்ந்தார்
இயேசு பரிசுத்த ஆவியினால் உற்பத்தியாக்கப்பட்டாலும் (மத். 18,20; லூக்.1:35) தாயின் வயிற்றில் கருவாக இருந்தார் (மத்.1:18), தாயினால் பெற்றெடுக்கப்பட்டார் (லாக் 247), விருத்தசேதனம் பண்ணப்பட்டார் (லூக்.2:21), தனது பெற்றோருடன் பயணம் செய்தார் (லூக்.2:39; மத்.2:13-14; 20-23; லூக்.2:41-42,51), தனது வளர்ப்புத் தந்தையான யோசேப்புக்கும் தாயாகிய மரியாளுக்கும் கீழ்ப்படிந்திருந்தார் (லூக்.2:51), வளர்ந்தார் (லூக்.2:40,52), திருமுழுக்கு பெற்றார் (லூக்.3:21). இயேசுவுக்கு மற்ற மனிதரைப் போன்ற சரீரம் (மத்.26:12; யோவா.1:14; எபி.2:14), ஆத்துமா’ (மத்.26:38); ஆவி’ (லூக்.23:46) இருந்தன.
அவருக்குப் பசி இருந்தது (மத்.4:2; 21:18), தாகம் இருந்தது (யோவா.19:28), அவர் விசனமடைந்தார். (மாற்.3:5), கோபமடைந்தார் (மாற்.3:5), இளைப்படைந்தார் (யோவா.4:6), தூங்கினார் (மாற்.4:38), களிகூர்ந்தார் (லூக்.10:21), வியர்வை சிந்தினார் (லூக்.22:44), கண்ணீர் விட்டார் (லூக்:19:41; யோவா.11:35). எனவே இயேசு மனிதனாக வாழ்ந்தார். லூக்.3:23-38
இயேசு இவ்வுலகில் தேவளாகவும் வாழ்ந்தார்
இயேசு பரிசுத்தமாக வாழ்ந்தார் (அப்.2:27; 3:14; 4:28), பல அற்புதங்கள் செய்தார், பாவங்களை மன்னித்தார் (மத் லூக்.7:48), தம்மை மற்றவர்கள் தொழுதுகொண்டதை ஏற்றுக் கொண்டார். (மத்.2:11; 8:2; 9:18; 14:33; 15:25; 20:20; 28:9; 28:17; லூக்.8:41; 24:52; யோவா-9:38). அவரைக் கர்த்த ர் என்றும் ஆண்ட வர் என்றும் மற்றவர்கள் அழைத்ததை ஏற்றுக் கொண்டார். தம்மைத் ஆண்டவர் என்று அழைப்பது சரியென்று கூறினார் யோவான்.13:13). தம்மைத் தேவன் என்று கூறியதை ஏற்றுக்கொண்டார் (யோவான்.20:28). இயேசு இவ்வல்கில் தேவனாகவும் வாழ்ந்ததற்கு இவை சான்றுகள் ஆகும். யோவான்.1:14
தேவனுடைய ஒரேபேறான குமாரன்
இவர் மற்ற மனிதர்களை போன்று படைக்கப்பட்டவரன்று. ஆதியிலேயே இருந்தபோதிலும், (யோவா.1 பரிசுத்த ஆவியானவராலும் உள்ளதமானவருடைய பெலத்தாலும் இயேசு பிறந்தார். இவ்விதமாகப் பிறந்த ஒரே நபராக இருக்கிறபடியால் இயேக், தேவனுடைய ஒரே பேறான குமாரன் என்றழைக்கப்படுகிறார் (யோவான்.1:14,18; 3:16,18; 1 யோவா,49).
அநாதியாய் பூர்வத்தில் இருந்து இருக்கிறார்
உலக வரலாற்றில் இன்றிலிருந்து சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவராக இருந்தபோதிலும் அதில் முன்பே (உலகத்தோற்றத்துக்கு முன்பே, நீடூழி காலமாக) அவர் ‘வார்த்தை என்ற பெயரில் தேவனுடன் தேவனாக இருந்தார் (மீகா 5:2; யோவான்.1:1-2,14; 6:38,51; 8:58;:17:5; 1 பேது.1:201 வெளி.13:8), பேரண்டம் முழுவதும், காணப்படுகின்ற, காணப்படாத யாவும் அவராலே அவருக்கென்று படைக்கப்பட்டன (யோவா.1:1-3 கொலோ.:16), பழைய ஏற்பாட்டு காலத்தில் அவர் கர்த்தருடைய தூதனானவர் என்ற பெயரில் அல்லது கர்த்தர் என்று பூமிக்குப் பலமுறை வந்ததற்கான ஆதாரம் உண்டு (ஆதி:16:7-14; 18:1;”19:24;”32:24-29; யாத்.3:2-4:19; யோசு.5:13-6:5; நியா.6:11-24; தானி.3:25; 7:9-14; சக.1:8-13). வார்த்தையாக இருந்த தேவன் மாம்சமாகி இவ்வுலகிற்கு மனிதனாக வந்தார் (யோவான்.1:14).
கிறிஸ்து தேவனாயிருக்கிறார்
புதிய ஏற்பாட்டின் பல இடங்களில் இயேசு கிறிஸ்துவைக் கர்த்தர் என்றும் ஆண்டவர் என்றும் குறிப்பிட்டிருப்பதை நாம் அறிவோம். பழைய ஏற்பாட்டில் இரு யெகோவா களைப் (கர்த்தர் களைப் பற்றி ஆதி,19:24; சக.3:2 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்துவை யேகோவா (கர்த்தர்) என்று ஏசா.40:3; எரே 23:5-6; 33:15-16 என்ற பகுதிகள் கூறுகின்றன. கிறிஸ்துவை வேதம் தேவன் என்று அழைப்பதை ஏசா.9:6-7, யோவான்.1:1-2; 20:28; அப்.20:28; ரோம.9:5; தீத்.2:13; எபி.1:8-9; 1 யோவா.5:20 போன்ற பகுதிகளில் காண்கிறோம். தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்று இயேசு கிறிஸ்துவைக்குறித்து வேதம் தெளிவாகக் கூறுகிறது (1 தீமோ.3:16). மேலும் ஆவியானவரும் குமாரனைத் தேவன் என்று அழைத்தார் என்பதை எபி.1:9 இல் காண்கிறோம். பிதா தேவனாயிருக்கிறார், குமாரன் தேவனாயிருக்கிறார், ஆவியானவரும் தேவனாயிருக்கிறார் (அப்.5:3-4; 2 கொரி-3:17) என்பதே உண்மை
என் தேவனே என் தேவனே என்று இயேசு பிதாவை நோக்கிக் கூப்பிட்டபோது (மாற் 15:34) அவர் உலகத்தின் பாவங்களை சுமந்து நிலையில் (யோவான்.1:29; 1 பேது.2:24), நமக்காகப் பாவமாக்கப்பட்ட நிலையில் (2 கொரி.5:21), நம்முடைய பிரதிநிதியாக அவ்வாறு கூறினார். அவ்வாறு கூறுவதற்குச் சற்று முன்பும் சற்று பின்பும் பிதாவே என்று அழைத்தார் (லூக்.23:34-46). பிதாவாகிய தேவன் கிறிஸ்துவுக்குப் பிதாவும் தேவனுமாக இருக்கிறார் என்பதும் (யோவா.20:28) இதற்கான ஒரு காரணமாகும்
கிறிஸ்து பிதாவுக்குச் சமமானவர்
- தேவனிடத்தில் இருந்த ‘வார்த்தை ‘ தேவனாயிருந்தார் (யோவான்.1:1-2). எனவே பிதாவும் வார்த்தையும் சமமானவர்கள்.
- தேவன் தமது பிதா என்று இயேசு கூறியதில் தன்னைத் தேவனுக்குச் சமமாக்கிளார் (யோவா.5:17,18).
- நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்’ (யோவான்.10:30), என்னை அறிந்திருப்பீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள் (யோவா.14:7), என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் (யோவான்.14:8-11) என்பன இயேசு பிதாவுக்குச் சமமானவர் என்பதை நிறுவுகின்றன
4, பிதாவினுடையவைகள் யாவும் தம்முடையவைகள், தம்முடையவைகள் யாவும் பிதாவினுடையவைகள் (யோவான்.16:15; 17:10) என்று இயேசு கூறியுள்ளார். சமமாயிருப்பவர்மட்டுமே இவ்வாறு கூறமுடியும்
- கிறிஸ்து இயேசு, தேவனுக்குச் சமம் என்பதை பிலி-2:6 நேரிடையாகக் கூறுகின்றது
- பிதாவானவர் அல்பாவும் ஓமேகாவுமாக இருப்பதுபோன்று குமாரனும் அல்பாவும் ஓமேகாவுமாக இருக்கிறார் (வெளி.1:8 உடன் 1:11-13 ஒப்பிடுக),
- பிதாவும் ஆட்டுக்குட்டியானவரும் புதிய எருசலேமின் ஆலயமாக இருக்கின்றனர் (வெளி 21:22) – தொழுதுகொள்ளப்படுதலில் இருவரும் சமம் என்பதைக் கூறுகின்றது. வெளி.5:13 ஐயும் காண்க
- ஒரு சிங்காசனத்தில் இருவர் (பிதாவும் குமாரனும்) உட்கார்ந்திருப்பதால் (வெளி.22:1) இருவரும் சமமானவர்கள் என்பது சந்தேகமின்றி தெரிகிறது.
- தண்ணீர்த் திருமுழுக்கின்போதும் (மத்.28:19) ஆசீர்வாதத்தின்போதும் (2 கொரி.13:14; வெளி.1:4-5) பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் திருப்பெயர் பயன்படுத்தப்படுவதால் மூவரும் சமமானவர்கள்
- ஊழியங்களில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் இணைந்து செயல்படுகின்றனர் (1 கொரி.12:4-5)
(குறிப்பு:- இவ்வாறு சமமாக இருந்தபோதிலும் தேவத்துவத்தின் தலைமைப் பொறுப்பு பிதாவிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது (யோவா.14:28; 1, கொரி.11:3; 15:28)
மனித குமாரனுக்கு விரோதமாக ஒருவர் பேசினால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். ஆவியானவருக்கு 1725 விரோதமாகப் பேசினால் அவருக்கு அது இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்க படுவதில்லை (மத்.12:31-32) என்று இயேசு கூறியிருக்கிறார் திரித்துவத்தில் ஆவியானவருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருபதை இது நன்கு எடுத்துக்காட்டுகிறது.
கிறிஸ்துவின் அன்பும் தியாகமும்
வார்த்தையாக இருந்த கிறிஸ்து, உலகத் தோற்றத்திற்கு முன்பே பிதா தம்மிடம் சிலுவை மரணத்தை பற்றிக் கூறிய போது தியாகத்துடன், மனமுவந்து, தாமாக முன்வந்து, ஏற்றுக்கொண்டார் (எபி.10:8-9), உலகத் தோற்றத்திற்கு முன் அடிக்கப்பட்டார் (1 பேது.1:20; வெளி.13:8 ). இவ்வுலகில் மனிதனாக வாழ்ந்தபோது ‘தேவன் இவ்வுலகில் வாழ்ந்தார் எப்படி வாழ்வார்’ என்பது பரிசுத்தமான, வல்லமையுடன் மனதுருக்கத்தின், மிகுந்த அன்புடன் அற்புதங்கள் செய்து, மக்களை குணமாக்கி, பாவத்திலிருந்தும் பிசாசின் பிடியிலிருந்தும் மக்களை விடுவித்து வாழ்ந்து காட்டினார். சவுக்கை எடுத்துக்கொண்டு தேவாலயத்தை சுத்தம் செய்தபோது யாரையும் அடிக்க வில்லை. மக்களின் நலனுக்காக கடினமாக உழைத்தார் (அப்.10:38), சிலுவை மரணத்தை குறித்த வேதனையுடன் வாழ்ந்தார் (லூக்.12:50; மத்.26:37 சிலுவையில் அடிக்கப்படுவதற்குக் தம்மை ஒப்புக்கொடுத்தார். மரணமடைந்து அடக்கம் பண்ணப்பட்ட இயேசு, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் (மத்.28; மார்ச்.16; லூக்.24; யோவா.20; 21, 1 கொரி.15:3-8,20) பரலோகத்திற்கு ஏறிச் சென்ற அவர் மனிதர்களாகிய நமக்காக வரங்களை பெற்றுக்கொண்டார் (எபே 4:8) பெந்தெகொஸ்தே நாளன்று பரிகத்த அஆலியைச் சீடர்கள் மேல் பொழிந்தருளினார் (அப்.2.32-33), இப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவர்கள் யாரேனும் ஆவலாகக் கேட்டால் அவர்களை பரிகத்த ஆவியினால் அபிஷேகிக்கிறார் (மத்.3:11) இப்பொழுது நமக்காக பிதாவிடம் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார் (ரோம.6:34; 1 யோவா.2-2 பரிசுத்தமாக பிறந்து பரிசுத்தமாக வாழ்ந்த இயேசுவின் வாழ்க்கை வரலாறு மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான நற்செய்தி நூல்களில் கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்த நோக்கங்களில் முக்கியமானவை
- தேவனையும் அவரது பண்புகளையும் வெளிப்படுத்துவதற்காக (யோவா.1:18; 14:8-10)
- தேவனுடைய வாக்குறுதிகளையும் தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்ற (ஆதி,3:15; சங்.16:10; 40:7 8; ஏசா.9:6-7; 52:13-15; 53:2-12; மீகா 5:2; சக.9:9; 11:12-13; ரோம.15:8-12; 1 கொரி,5:7; 2 கொரி.1:20 போன்ற பல வசனங்கள்)
- சாத்தானையும் அவனது செயல்களையும் அழிப்பதற்காக (யோவான்.12:31; 16:11; கொலோ.2:15; எபி.2:14 யோவா.3:8)
- மனிதனின் பாவங்களைப் போக்குவதற்காக (ஏசா.53:4-6; யோவான்.1:29; கொலோ.1:14; எபி.2:17; 1 பேது.2:24; 1 யோவா.1:7; 2:2; 3:5)
- உலகம் இரட்சிக்கப்படும்படி (மாற்.10:45; யோவா.3:17)
- மனிதர்கள் நித்திய ஜீவனை அடையும்படிக்கு (யோவான்.3:16,36; 10:10,27-28; 1 யோவா.5:11-12) –
- தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடையீட்டாளராகச் (மத்தியஸ்தர் செயல் (1 தீமோ .2:5-6; எபி.B:6; 9:15; 12:24)
- தேவனுடன் மனிதனை ஒப்புரவாக்க (ரோம்.5:10; 2 கொரி.5:18-19; எபே.2:16; கொலோ.1:20-21
- மனிதனின் நோய்களை குணமாக்க (ஏசா.53:4-5; மத்.8:16-17; 1 பேது 2:24
- பரிசுத்த ஆவியின் திருமுழுக்கு தருவதற்காக (மத்.3:11 யோவான்.7:37-39; அப்.2:32-33)
- மனிதருக்காக வரங்களைப் பெற்றுக் கொள்ள (எபே.4:0); லூக்.4:17-21
- தம்மை பின்பற்றுபவர்கள் பரலோகம் சேர்க்க (யோவா.14:2-3) கிறிஸ்து உலகிற்கு வந்தார்.
தீர்க்கதரிசி, ஆசாரியர், அரசன்
இயேசு ஒருவரே இந்த மூன்று பதவிகளையும் வகித்தவர்
- இயேசு தீர்க்கதரிசி என்பதை உபா.18:15-19 ஐ யோவா.5:45-47 உடன் ஒப்பிட்டால் தெரிந்து கொள்ளலாம். மத்.21:11,46, லூக்.4:23-24 பகுதிகள் அவரைத் தீர்க்கதரிசியென்று காட்டுகின்றன. அவர் பல தீர்க்கதரிசனங்களை உரைத்துள்ளார். அவற்றில் முக்கியமானவை மத்.24:1-44; 25:31-46.
- இயேசு ஆசாரியர் (எபி.5:6-10; 7:14-28; 8:1-6; 9:11-12; 10:11-12),
- இயேசு அரசர் (மத்.2:2; 25:34,40; 27:37; மாற்.15:2; லூக்:19:38; யோவா.1:49; 12:13-15; வெளி.115; 19:16).
கிறிஸ்துவின் இக்காலச் செயல்
கேட்கிறவர்களுக்குப் பிதா அருளும் பரிசுத்த ஆவியினால் கிறிஸ்து திருமுழுக்கு தருகிறார் (லூக்கா.11:13; மத் 3:11; அப்.2:32-33), பரலோகத்தில் பிதாவின் வலது புறத்தில் யாவரும் காணும்படியாக வீற்றிருக்கும் கிறிஸ்து (மார்ச்.16:19; ரோம,8:34; எபே.1:21; கொலோ .3:1; எபி.1:3; 8:1; 10:12; 12:2; 1 பேது.3:22) நமக்காகப் பிதாவிடம் பரிந்துபேசிக்கொண்டிருக்கிறார் (ரோம.8:34; எபி.7:25; 1 யோவான்.2:1-2). மக்களின் கண்களுக்குத் தெரியாதவாறு உலகெங்கும் கிறிஸ்து பிரசன்னமாயிருக்கிறார் (மத்.28:20). இதில் இரு சிறப்பான பிரசன்னங்கள் உண்டு
- அவருடைய நாமத்தினால் மக்கள் கூடிவரும் இடங்களில் அவர்கள் நடுவில் இருக்கின்றார் (மத்.18:20).
- அவரை ஏற்றுக்கொள்கிறவர்களின் இருதயங்களில் வாசமாயிருக்கின்றார் (எபே.3:17)
வருங்காலத்தில் கிறிஸ்து
வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் பெற்றிருக்கும் கிறிஸ்து (மத்.28:18) சபையை உலகினின்று எடுத்துக்கொள்வதற்காக ஆகாயத்திற்கு வருவார் (1 தெச.4:14-17). இதை இரகசிய வருகை (Secret coming, rapture) என்கிறோம். இதற்கு ஏறத்தாழ எழு ஆண்டுகளுக்குப் பின்னர் தமது பரிசுத்தவான்களோடும் தூதரோடும் பூமிக்கு வருவார் (சக.14:1-9; மத்.24:30-31; வெளி.19:11-21). தமது பரிசுத்தவான்களோடு சேர்ந்து ஆயிரம் ஆண்டுகள் பூமியில் அரசாளுவார் (வெளி.20:4,6). அதன் பின்னர் புதிய பூமியில் பிதாவுடன் இணைந்து சிங்காசனத்தில் வீற்றிருந்து என்றென்றுமாக அரசாளுவார் (வெளி 22:1-3). அவருடைய பரிசுத்தவான்கள் அவரோடு அரசாளுவார்கள் (தானி.7:18,27). மேலும் நியாயாதிபதியாக யாவரையும் கிறிஸ்து நியாயந்தீர்ப்பார் (யோவா.5:27,30; அப்.10:42; ரோமர்.14:10; 2 கொரி 5:10; 2 தீமோ .4:1), கிறிஸ்துவினுடையவர்களும் அவருடன் சேர்ந்து நியாயந்தீர்ப்பார்கள் (1 கொரி.6:3; வெளி.20:4).
இயேசுவின் நாமத்தில் வல்லமை
இயேசுவின் நாமத்தில்தான் எந்த மனிதனும் இரட்சிப்படைய முடியும் (அப்.4:12). இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கும் ஜெபங்களுக்குப் பதில் உண்டு (யோவான்.14:13-14; 16:23), விசுவாசிகளுக்கு அவருடைய நாமத்தில் பிசாசுகளைத் தத்துவம் (மாற் 16:17; அப்.16:18), அற்புதங்கள் செய்யவும், நோயாளிகளைக் குணமாக்கவும் (அப்.3:6-8,16; 4:30) அதிகாரம் உண்டு. நமது வார்த்தையினாலும் செயல்களினாலும் எதைச் செய்தாலும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் செய்யும்படி எதிர்பார்க்கப்படுகிறோம் (கொலோ.3:17).